பல்லவி:
விழியெனும் வில்லால் காதல் தொடுத்தவளே..
மௌனமொழிப் பேசி இதயம் பறித்தவளே..
மழை கொண்ட மேகமாய்
வான் வெளி சுற்றித் திரிந்தேன்..
குளிர் தென்றலாய் நீ
உரசிடப் பெருந்தூறலாய் பொழிந்தேன்..
துள்ளித் துள்ளிக் குதிக்கிறேன்..
அடிக்கடி என் பெயர் மறக்கிறேன்..
சரணம் 1:
இரவுகள் உன்னால் நீளுதடி..
கனவுகள் களவுப் போனதடி..
உன் வாசம் கொண்ட காற்று மட்டும்
சுவாசமாய் என்னுள் நுழையுதடி..
புதிதாய்ப் பிறந்தேன் காதலால்..
உலகம் மறந்தேன் ஆதலால்..
சரணம் 2:
பெண்ணவள் பார்த்ததும் இதயம்
இறக்கை விரிக்குதே..
என் ஒவ்வொரு செல்லிலும்
அவள் முகம் சிரிக்குதே..
கால்களும் சாலை மறந்ததே..
காற்றிலும் பாதை வரைந்ததே..
ஓவியப் பெண்ணே ஓடி விடாதே..
என் உலகம் உன் பின்னே மறந்துவிடாதே..
கருத்துகள்