நான் வாசித்த நூல் : 9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி - பா.ராகவன்


அமெரிக்க உலக வர்த்தக மைய கட்டடம் மீதான அல்கொய்தாவின் தாக்குதலுக்கு காரணமான விதை எங்கு விழுந்தது..? உலக நாடுகளின் தலைவன் என்ற மனபோக்கு கொண்ட அமெரிக்காவின் அத்தனை பாதுகாப்பு அரண்களையும் தாண்டி அதுவரை உலகம் கண்டிராத புதுவிதமான மாபெரும் தாக்குதலை எவ்வாறு அல்கொய்தா நடத்தியது என்று அலசும் நூல்.

புத்தகத்தின் தொடக்கம் ஆங்கில படங்களின் அறிமுக காட்சியை போல் தொடங்குகிறது. அந்த விறுவிறுப்பு சற்றும் குறையாமல் அடுத்தடுத்து வரும் பகுதிகளும் இருக்கின்றன. வர்த்தக மைய கட்டட தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்தையும் தெளிவாக விளக்கிச் செல்கிறது நூல்.

ஒசாமாவின் மதப் பற்று. அதன் மூலம் அவருக்கு கிடைத்த தொடர்புகள். அல்கொய்தா என்ற பெயரில் ஒரு இயக்கம் தொடங்கும் முன்பு ஒரு சிறு படையினை தோற்றுவித்து அதற்க்கு பயிற்சி கொடுத்தல். ஆப்கன் - சோவியத் படைகளுக்கிடையே நடந்த யுத்தம். அதில் ஒசாமாவின் படைகளின் பங்கு. அதன் மூலம் கிடைத்த அமெரிக்காவின் ஆதரவு. சவூதி அரேபியாவில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை வெறுத்த ஒசாமாவின் நிலைப்பாடு. உலக முஸ்லிம் இளைஞர் மத்தியில் பெரும் தாக்கத்தை தன் பேச்சின் மூலம் ஒசாமா ஏற்படுத்தியது. மொத்த அமெரிக்காவுமே நமது எதிரி என்ற மனநிலையை ஒசாமா பெறுவது. பகையின் உச்சமாய் உலக வர்த்தக மைய கட்டிட தாக்குதலை நிறைவேற்றுதல். இத்தனை பெரிய தாக்குதலை அல்கொய்தா திட்டமிடும் பொது அமெரிக்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்டிருந்த நிலை. அவர்கள் கோட்டை விட்ட இடங்கள் என்று அனைத்து தகவல்களையும் புள்ளி விவரங்களுடன் கூறும் ஒரு தெளிவான விறுவிறுப்பான நூல்.

கருத்துகள்