யாராவது ஒரு ஆட்சியாளர், அல்லது மேல் மட்டத்தில்
இருப்பவரோ தன் அதிகார பலத்தையோ தன் அடக்குமுறையையோ மற்றவர்கள் மீது செலுத்த
முற்ப்பட்டால் “என்னய்யா இவன்.. ஹிட்லர் ஆட்சி நடத்துறான்..” என்று சொல்லக்
கேட்டிருப்போம்... இப்படி அடக்குமுறைக்கும் சர்வாதிகாரத்திற்கும் ஒரு அடையாளமாய்
மாறிபோன ஹிட்லர் பற்றி கனகச்சிதமாய் கூறும் நூல் தான் இந்த “ஹிட்லர்”... எனக்கு
சிறுவயது முதல் ஹிட்லர் என்றால் அவரது சின்ன மீசை தான் நியாபகம் வரும்.. ஆனால்
குட்டி மீசைக்காரர் செய்திருக்கும் விஷயங்கள் பற்றி படித்த பொழுது “கொய்யாலே.. நல்ல
வேலை ஜெர்மனில பிறக்கல...” அப்படின்னு ஒரு நிம்மதி வந்தது... பன்னிரண்டு வருட
ஆட்சி, அறுபது லட்சம் கொலைகள்.. இப்படி ஒரு சர்வாதிகாரி நிச்சயம் இனி சாத்தியம்
இல்லை.. யூதர்கள் மீதான இவரின் இனவெறிச் செயல் படித்த நொடிகளில் நடுக்கத்தை
கொடுத்தன...
பா.ராகவன் அவர்களின் எழுத்து நடையை மிகவும்
ரசித்தேன்.. பல இடங்களில் ஹிட்லரின் செயல்களை அவர் எள்ளிநகையாடும் விதம் என்னைக்
கவர்ந்தன... அரசியல் ரீதியான புத்தகங்களை நான் அதிகம் வாசித்ததில்லை... ஹிட்லரின்
அரசியல் வாழ்க்கையை இவர் எழுத்தாக்கி இருக்கும் விதம் அருமை... மிக நீண்ட
நாட்களுக்குப் பிறகு நான் படித்த ஒரு விறுவிறுப்பான புத்தகம்...

கருத்துகள்