சில உளறல்கள்...!

* அன்பின் அர்த்தமதை அன்னைக்கு அடுத்து
  எனக்கு காட்டியவளே....!!

* என் சிந்தையின் ஒவ்வொரு செல்லிலும் அமர்ந்து
  நாளும் எனை சிறைபிடிப்பவளே...!!
  நலமா நீ.....?
  நம்புகிறேன் நலம் என்று....!!

* தெரியுமா உனக்கு....??
   உன் உன்பிற்கு அடிமையான இந்த
  ஆடவனின் அவஸ்தைகள்....!!
  கேள்....!!

* உன்னோடு உரையாடாமல் இருக்கும்
  என் ஒவ்வொரு நொடியும்
  சத்தமின்றி ரத்தம் சிந்துகின்றன...!!

* மற்றவர்கள் பார்த்துவிடுவார்கள் என்ற
  பயத்தில் அழுகையைக் கூட
  புதைத்துக் கொள்கிறேன் என்னுள்....!!
  என் உதடுகளின் உதவியோடு.....!!

* படுக்கையில் நான் கிடக்கும் பொழுது
   உன் இனிய கனவுகள் வந்து
  கண்ணீரால் என் தலையணையை
  ஈரமாக்கிச் செல்கின்றன....!!

* தனிமையில் நொடிகணம் இருந்தாலும்
  தகிக்கிறது என் உள்ளம்...!!
  எங்கே தற்கொலை செய்து
  கொள்வேனோ என்று....!!

* பயப்படாதே...!!
  பாதை மாறமாட்டான் இந்த
  பைத்தியக்காரன்..!!

* இப்பொழுது தான் எனக்கே தெரிகிறது...!!
  என் உள்ளம் கொண்டிருக்கும்
  உன் மீதான என் அன்பினை....!!

* எட்ட நின்றாலும் என் எண்ணங்கள்
  என்றும் உன் வசமே......!!
  ஆம்..!
  உன்னை மறக்கும் நொடி தான்
 என் மரணம்.....!!

* உன்னோடு உரையாடிய அந்த
  ஒவ்வொரு நொடியும்
  என் இதயத் துடிப்போடு
  இன்னமும் இருக்கிறது....!!

* என் ஒவ்வொரு விடியலும்
  உன் நினைவோடு தான்
  தொடங்குகின்றன.....!!
  என் ஒவ்வொரு இரவும்
  உன் நினைவோடு தான்
  உறங்குகின்றன...!!

* நீ அறிமுகமான அந்த நொடி
  எனக்குத் தெரியாது பெண்ணே....!!
  நீ இப்படி வார்த்தைகளாய் என்னுள்
 வடிவம் பெறுவாய் என்று.....!!

* ஒரு நொடியேனும் எண்ணிப் பார்...!!
  அழகான உன் அன்பில்
  தொலைந்து போன என்னை...!!

* இப்படிக்கு...
 உன் நினைவுகளில் பிரிவினை மறப்பவன்....!!

கருத்துகள்

Jeyaraman இவ்வாறு கூறியுள்ளார்…
I loved it machi...Superb:-)
Jeyaraman