எழுத்து எனும் வலைத்தளத்தில் நான் எழுதிய சில கவிதைகள்....
-----------------------------------------------------------------------------
குறுஞ்செய்திகள்
ஆண்டுகள்
பல
ஆனபொழுதும்
இன்றும்
என்
அலைபேசியில்
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கின்றன..
smiley உடன்
நீ
அனுப்பிய
குறுஞ்செய்திகள்...!!
------------------------------------------------------------------------------
ரிங்க்டோன்
தப்பு தப்பாக
நீ
பாடிய
அந்த
தமிழ் பாடல்தான்
இன்னும் இருக்கிறது...
என்
அலைபேசியின்
ரிங்க்டோனாக....
-------------------------------------------------------------------------------
முத்தம்
உன்னிடம்
முத்தம்
பெற
முயலும்
போதெல்லாம்
என்
உறக்கத்தை
கலைத்து
விடுகின்றன
பாழாய் போன
கொசுக்கள்....!
-------------------------------------------------------------------------------
கவிதைக்கு அழகு பொய்
பெண்ணே....!
மண் தரைக் கூட
நீ நடந்தால்
மலர்த் தரை
ஆகிறது....!
இப்பொழுது
தெரிகிறதா.....?
கவிதைக்கு அழகு
பொய் தான் என்று.....!

கருத்துகள்