பில்லா-2வும் தமிழ் சினிமாவும்

வெறும் பிரம்மாண்டமும் ஹீரோவின்  நட்சத்திர அந்தஸ்த்தும் மட்டும் ஒரு திரைபடத்தை வெற்றி படம்மாக்க முடியாது என்பதை நிருபித்திருக்கும் மற்றுமொரு திரைப்படம் தான் பில்லா 2....  படமாக்கும் நேர்த்தியில் எடுத்துக்கொண்ட சிரத்தையை படக்குழுவினர் படத்தின் கதையில் எடுத்துக்கொள்ளவில்லை. "king of opening" என்று ரசிகர்களாலும் தியேட்டர் அதிபர்களாலும் அழைக்கப்படும் "அஜித்" என்ற ஒற்றை வரி மந்திரத்தால் மட்டுமே திரைப்படம் இரண்டு வாரங்கள் மட்டுமாவது தியேட்டரில் இருக்க முடிந்தது. 
தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்து வருகிறது என எண்ணும் போதெல்லாம் இது போன்ற திரைப்படங்கள் நம் எண்ணைதை பொய்யாக்கி விடுகிறது. இன்னும் எத்தனையோ நம் மண் சார்ந்த கதைகளும் நம் மக்கள் சார்ந்த கதைகளும் திரையில் சொல்லபடாமல் இருக்கும் பொழுது எதற்காக சினிமா உலகம் இது போன்ற கற்பனை கலந்த வன்முறையால் நம்மை சித்திரவதை செய்கின்றன என்று புரியவில்லை.
காசு கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனை Star value கொண்டு ஏமாற்றும் வித்தையை தான் செய்ய முற்பட்டிருகிறது இந்த திரைப்படம்.  மக்கள் நல்ல படங்களை ஆதரிக்க தவறிவிடுகிறார்கள் என ரசிகர்கள் மீது பழி சுமத்தும் திரை உலகினர் இது போன்ற திரைப்படங்களால் ரசிகனின் ரசிப்புத்தன்மையை நசுக்கத் துணிகிறார்கள். 
கல்லா கட்ட நினைத்து இவர்கள் செய்த பில்லா நல்லா இல்லை என்ற விமர்சனத்தையே எதிர் கொண்டு வருகிறது. 
2012இன் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படம் என்ற அந்தஸ்த்தை பெற்ற திரைப்படம் என்ற எண்ணத்தோடு படம் பார்த்து விட்டு வெளியில் வந்தால் நம் இதழ்களில் சிரிப்பே மிஞ்சுகிறது....!!

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு
Dhinesh இவ்வாறு கூறியுள்ளார்…
Miga sariyana karhuthu ... Iniyavathu mass hero endra imagae illamal Sirantha kathai udan .. Tamil cinema vai varaverpom :-)